நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர்

பரிதவிக்கும் நேரம்
புரிந்துணர்வுடனே
கை கொடுப்பாரே

உறங்க மறுத்த விழியை
ஊக்கமிட்டு உரமூட்டித்
தாகந் தீர்க்கும் தோழரே

நடமாடும் மனிதர் பலரில்
கூட இருந்து குழி பறிக்கும்
சிலரை விலக்கி மனதிலே
தெய்வமாய் நிலைப்பவரே

முகந் தெரியா உறவானாலும்
அகங் குளிர ஆபத்தில் தனது
குருதியை மெழுகாக்குபவரே

எல்லையே இல்லா இவ்வன்பு
தொல்லை இல்லாது பழகும்
தூய்மை , விட்டுகொடுக்கும்
தன்மை என்றும் நிலைக்கும்
நட்பென்றாலே இதுவன்றோ .

Nada Mohan
Author: Nada Mohan