நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி

மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட

சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்

எள்ளென்றால் எண்ணை ஆகாது தம்பி

ஏற்றத்தை உயர்வாக்கி ஏமாறாது நடப்பாய்

தெள்ளத்தெளிவு உன்னிடம் வேண்டும் பாராய்

கள்ளம் வேண்டாம் கடமை வேண்டும்

உரிமை என்று உழறித் திரியாது

உருக்குலைந்து அலைமேவும் குமிழியும் ஆகாதே

பிறருக்காக வாழ்வது வாழ்வென அலையாதே

பிரயோசனம் இன்றிப் பொழுதைக் கழிக்காதே

மெல்லென மழைத்துளி மண்ணை நனைப்பதற்கல்ல

இயற்கை என்பதை அழியாமல் காப்பதே

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan