செவிலியர் திலகம்…

ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்.......13.08.2026 செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து துன்பக்கடலில்...

Continue reading

செவிலியர் திலகம்…

ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்…….13.08.2026

செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில் துடித்தஉயிர்களை
தூய்மையோடு காத்தகாரிகை
ஆவணித்திங்கள் பதின்மூன்றிலே
அன்பின்சுடராய் இவ்வுலகை விட்டுஏகினாரே !

குருதிசிந்திய போர்க்களத்தின் நடுவே
மரணஓலங்கள் விண்முட்ட ஒலிக்க
இருள்சூழ் உலகினில் ஒற்றைவிளக்கேந்தி
போர்வீரர்களின் விழுப்புண்களை ஆற்றியதருணம்
வலியால்துடித்த வீரர்கள்முகமோ
அன்னையின் முகத்தினைக் கண்டு
வேதனைமறந்து புன்னகை பூத்தனரே !

தூய்மைப் பணியைக் கையிலேந்தி
கருணையின் வடிவாய் உலாவந்து
செவிலியர் துறைக்கு புதுப்பாதை அமைத்து
செவிலியர் திலகமாய் மிளிர்ந்த காரிகையை
வானம்வசமாக்கியதே ஆவணித்திங்கள் பதின்மூன்றினிலே !

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading