செவிலியர் திலகம்…

ரஜனி அன்ரன் (B.A) செவிலியர் திலகம்…….13.08.2026

செல்வச்செழிப்பினில் இத்தாலியில் பிறந்து
சிற்றின்பவாழ்வினை அறவேதுறந்து
செவிலியர்பணிக்கு தன்னையே அர்ப்பணித்து
துன்பக்கடலில் துடித்தஉயிர்களை
தூய்மையோடு காத்தகாரிகை
ஆவணித்திங்கள் பதின்மூன்றிலே
அன்பின்சுடராய் இவ்வுலகை விட்டுஏகினாரே !

குருதிசிந்திய போர்க்களத்தின் நடுவே
மரணஓலங்கள் விண்முட்ட ஒலிக்க
இருள்சூழ் உலகினில் ஒற்றைவிளக்கேந்தி
போர்வீரர்களின் விழுப்புண்களை ஆற்றியதருணம்
வலியால்துடித்த வீரர்கள்முகமோ
அன்னையின் முகத்தினைக் கண்டு
வேதனைமறந்து புன்னகை பூத்தனரே !

தூய்மைப் பணியைக் கையிலேந்தி
கருணையின் வடிவாய் உலாவந்து
செவிலியர் துறைக்கு புதுப்பாதை அமைத்து
செவிலியர் திலகமாய் மிளிர்ந்த காரிகையை
வானம்வசமாக்கியதே ஆவணித்திங்கள் பதின்மூன்றினிலே !

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading