புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026

காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும்
காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க
புதைகுழிகளின் மர்மங்களும் புரியாதபுதிராக
நாளுக்குநாள் மனித எச்சங்களும்மீட்பு
செம்மண்ணுக்குள்ளே புதைந்த வலிகளையும்
தேடப்படும் உறவுகளையும் நீதிக்கான வலிகளையும்
ஆத்மாக்களின் மெளனக் குரல்களையும்
சுமந்தபடியே புதைகுழிகள் சாட்சியாகிறதே !

பூமிக்குகீழே புதைந்து கிடப்பது வெற்றுடல்களல்ல
வெளிவராத சத்தியங்களும் விடைதெரியா வினாக்களுமே
பூமிக்குமேலே மெளனத்தின் ஆட்சி
புதைகுழிக்குள்ளே கதறலின் சாட்சி
அடையாளம் தொலைத்த ஆடைகளும்
அறுபட்டுப்போன நம்பிக்கைகளும்
மண்ணோடு மண்ணாக மக்கிப்போனதுவே !

நீதியின் கதவுகள் சாத்தப்பட
அநீதிகள் தலைவிரித்தாட
மண்ணின் மடியில் மனுதர்மம் புதைந்ததே
புதைகுழிகள் வரலாற்றுப் பெருங்காயம் !

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading