Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.10.2024
கவி இலக்கம்-284
“ஆசான்”
——————
உலக அளவில் உருவாக்கம் ஆசான்களே
கல்வி தந்து மறைந்த வழிகாட்டி ஆசான்கள் என்றும் நினைவினிலே
அ” அரிசியில் கோவில் முன்னிலையில்
எனது தகப்பனார் ஆசானாய் எழுதியதில்
அன்னையாக தந்தைக்கு நிகராக ஆசானாக தகப்பனாரே
ஐந்து வயதில் பள்ளி சென்றபோது
ஆசான் முன்னிலையில்
அழுதபோது
எமை நல்வழி படுத்தி
பாசத்தை எமக்கு தந்தபோது
பக்குவமாய் உயர்ந்திட
நல் ஒழுக்கமும் தந்து
ஏணிப் படியில் உயர வைத்து
எதிர்கால அரண்களாய்
படிப்பு தந்து
கற்றல் கற்பித்தல் தாரக மந்திரமாய் அறிவு ஊட்டியது
மாணவர் சமுதாயம் ஆசான்களை போற்றுவது
மறக்க முடியாதன்றோ
எம்மை உருவாக்குபவர்கள்
உருவாக்கியவர்கள எம்
ஆசான்களே
என்றும் எம் உள்ளத்தின் நினைவில் இருப்பர்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading