கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Jeya Nadesan

கவிதை வாரம்-13.01.2022
கவி இலக்கம்-1941
மார்கழியில் உள்ளத்து நினைவுகள்
————————————————
வருடா வருடம் புத்தாண்டும் விடை பெறுமே
இயற்கையின் மாற்றமும் குளிரும் பனியும்
இயேசு பாலன் பிறப்பும் கொண்டாட்டங்களும்
பொல்லா கொடூரம் சொல்லாமல் வந்ததினாலே
எல்லாமே விட்டுப் போகவே மனித எண்ணங்களிலே
ஆழிப் பேரவையின் அழியாத நினைவுகள்
இயற்கையின் சீற்றத்தில் சுனாமி என்ற பெயரிலே
புவி அதிர்வால் கடல் பொங்கி சீற்றம் ஏனோ
எம் இன மக்களின் உயிர்களை உடமைகளை
அழிந்து விழைத்த சோகம் ஆற்ற முடியலையே
ஆண்டுகள் பல கடந்து சென்றாலும்
மறந்திட முடியாத நினைவுகளாக உள்ளமதில்
சொத்து இழந்து சுகம் இழந்து கரை ஒதுங்கிய உடல்கள்
சிந்தை கலங்கி நின்றோர் மீனவர்கள் அதிகம்
கரையோரப் பகுதிகள் பட்ட துன்பம் சொல்லிடங்கா
இரக்கமற்ற செயலாக இடம்பெற்று சென்றதே
காலம் முழுவதும் உன்னை நம்பி வாழ்ந்தவர்கள்
உப்பிட்ட சோற்றுக்கு உணவாக உதவியவைகள்
கணப் பொழுதில் நீயே இரையாக்கி சென்றாயே
கள்ளம் கபடமற்ற உயிர்களை விழுங்கிய கடலே
இனியாவது அலை பாயும் கொடுமையை தணித்திடு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading