கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-22.03.2022
கவிதை இலக்கம்-167
பணி
——————
மண்ணில் புதைந்த மணி ஜெய மணி
ஆசிரியப்பணி ஆன்மீகப்பணி
மண்ணோடு புதைந்து விட்டது
உடன் சகோதரியே தலைமை ஆசிரியாய்
பாடசாலை மாணவர்களோடு
கல்வியில் பயணித்த காலங்கள்
நீர் அறிவூட்டிய பிள்ளைகள் எவரும்
உம் பணியை மறப்பதற்கில்லை
கோவில்களிலும் சமூகங்களிலும்
உம் ஆன்மீகப் பணியை மறப்பாரில்லை
நற்பணியில் ஊருக்காய் உழைத்தீர்கள்
உம் புன்முறுவல் கண்டு ஊக்கம் பெற்றோர்
உம் பேச்சை கேட்டு உள்ளம் உருகினோர்
வாழும்போது வார்த்தையால் உம் பணிக்கு நன்றி
வார்த்தை இன்றிப் போகும்போது மெளனத்தால் நன்றி
அகிலத்தில் தன் கடன் பணி செய்தே சாதனை படைத்தீர்
ஆண்டவன் சன்னிதியில் அமைதியாய் உறங்குவீராக

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading