Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.05.23
கவிதை இலககம்-221
காணி
———-
பாரதி காணி நிலம் வேண்டும் கண்ணம்மா
என் காணி நிலம் பறி போனது ஏனோ சின்னம்மா
பேணி காத்த காணி என்னம்மா
ஆமிகள் பரம்பரை சொத்தை பறித்தது சொல்லம்மா
தமிழர் ஆண்ட பரம்பரை சொத்து தானம்மா
புத்தர் சிலை எழும்புவது அநியாய செயல் என்னம்மா
தோப்பும் சோலையும் நிறைந்த காணி பாரம்மா
ஆப்பு வைக்குது அரசு ஏமாற்றுவது ஏனம்மா
அப்பாவி தமிழர்கள் பரம்பரை காணிகளே
அன்னியர் கையில் பறி போகுது பாரம்மா
நிற்கதியாய் எம் மக்கள் நடுத் தெருவில்
ஏதிலிகளாக ஆவார்கள் உண்மை தானம்மா
தமிழ் அரசியல் வாதிகள் கண் மூடி விட்டார்களோ
கேள்வி குறியாப் போச்சு விடை கூற முடியாதம்மா
எம்மவர் வாழ்வில் நாடே அந்நியர் கையில் தானம்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading