பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-07.09.2023
கவி இலக்கம்-1746
எழுத்தறிவில்லை எனில்
——————————–
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்
இவை இரண்டும் இல்லையெனின்
மனித வாழ்வு மேம்பட முடியாதே
வாய்மொழி மூலம் பகிர்ந்து கொள்ள
எழுத்து மூலம் தெரிவித்து கொள்ள
தாய்மொழி கற்றல் அவசியமன்றோ
ஆதி கால அறிவாளிகள் நூல்களாக
எழுத்துக்களால் விட்டு சென்றவர்களே
படித்து பலதையும் அறிதல் அவசியமன்றோ
பன்மொழி கற்றும் பயன் பெறலாமே
பள்ளிக்கு சென்று பலதையும் கற்க வேண்டும்
கற்றதை மற்றவர்க்கு பகிர்ந்தளிக்க வேண்டும்
ஒழுக்கம் நிறைந்த பண்பு வேண்டும்
தனி மனிதனுக்கும் பல்வேறு மனிதருக்கும்
எழுத்தறிவு மிக முக்கியமன்றோ
தவறின் வேலை வாய்ப்பு கிடைப்பது அரிதன்றோ
வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாதே
சமுதாய வளவில் முன்னிற்க முடியாதே
பின் தள்ளப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்குமே
புரட்டாசி 8ம் திகதி எழுத்தறிவு தினமாமே
யுனேஸ்கோ நிறுவனம் கொண்டாடப் படுகின்றதே
எழுத்தறிவு என்பது மனித வாழ்விற்கு முக்கியமன்றோ

Nada Mohan
Author: Nada Mohan