Jeya Nadesan

கவிதை நேரம்-01.02.2024
கவி இலக்கம்-1811
கைக்குள் கையாய்
கைத்தொலைபேசி
——————
நவீன விஞ்ஞான வளர்ச்சியில்
உருவானது கைத் தொலைபேசியே
மனிதன் தொடர்புக்கு சாதகமானது
அவசர உலகில் மிக அவசியமானது
அகிலத்தை ஆட்டி படைக்கிறது
இளையோருக்கு முதல் எதிரியாகினது
உலகத்தை சுருட்டி ஆட்சியில் வைக்கிறது
உள்ளங்கையில் மடக்கி வைக்கிறது
உணர்வுகளை களவாடி உறவுகளை பிரிக்கிறது
சுறு சுறுப்பானோரை சோம்பேறி ஆக்கிறது
கைகளில் தவண்டு எதிரியாகின்றது
கனவுகள் பறித்து நினைவுகளை அழிக்கிறது
தொடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாகிறது
கைகள் கண்கள் மூளை சேதம் தருகிறது
மனதை அடிமையாக்கி நினைவுகள் அழிக்கிறது
அதிக பணம் கொடுத்து கடனும் ஆகிறது
கை பேசி என செவிக்கே வந்து நின்றாய்
தொலை பேசி என தொலைந்து போகிறாய்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading