மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 162

இரண்டு சுண்டு அரிசி

அன்றைக்கு அளந்தது
அவ்வளவும் தான்
இரண்டு சுண்டு அரிசி
ஏழு பேர்
போஜனம்
மாங்காய் கறியுடன்
அளந்து பரிமாற
மறு முறை தங்கை கேட்தற்கு
கோபம் வந்தது!
சட்டியில் இருந்தால் தானே
அகப்பையில் வரும்
அதட்டி மறுதலித்தாலும்
உள் நேருடல்
நியாயமான பசிக்கு
கோபம் கொண்டோமே
எங்கே தவறு
இல்லாமையை இல்லாமல்
செய்வது தானே
தீர்வு !
தீர்வு காண
வெளி நாடு போவோமா ?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading