K.Kumaran

சந்தம் சிந்தும்
வாரம் 162

இரண்டு சுண்டு அரிசி

அன்றைக்கு அளந்தது
அவ்வளவும் தான்
இரண்டு சுண்டு அரிசி
ஏழு பேர்
போஜனம்
மாங்காய் கறியுடன்
அளந்து பரிமாற
மறு முறை தங்கை கேட்தற்கு
கோபம் வந்தது!
சட்டியில் இருந்தால் தானே
அகப்பையில் வரும்
அதட்டி மறுதலித்தாலும்
உள் நேருடல்
நியாயமான பசிக்கு
கோபம் கொண்டோமே
எங்கே தவறு
இல்லாமையை இல்லாமல்
செய்வது தானே
தீர்வு !
தீர்வு காண
வெளி நாடு போவோமா ?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading