இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Kavikco Parama Visvalingam

தரமாய் நிமிர்வாய் நாளை…..

தரையினில் வீழ்ந்த விதைகள் எல்லாம்
தாவரமாகும் தரணயிலே
வரமாய் கிடைத்த வாழ்க்கையிது
தரமாய் நிமிர்வாய் தலைமகனே!

உரமா இருக்கும் உறவுகளில் – சிலர்
சிரமே தாழ்த்தி சிண்டு இணைப்பார் – இரு
கரமே உனது எனச் சொல்வார்
கவனம் அவர்மேல் கண்ணாயிரு.

வெறுவாய் மென்னு விளம்பரம் செய்து
வீணாய்ப் போகாதே
உரமாய் நிற்பாய் உறுதுணையாக – நாளை
உயர்வாய் நிற்பாய் குன்றாக!

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading