அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

Kavikco Parama Vsvalingam

வளர்ந்த குழந்ழைதகள் தாமே….

பிறக்கின்ற குழந்தை அழுகின்றது – ஏன்
பிறந்தோம் என்றா நினைக்கின்றது
தரணியில் பிறந்த அக் குழந்தை – தன்
வரவினை உறவிற்கு சொல்கின்றது.

அடுத்தது என்ன என்பதனை
அதுவாய்த்தானே நினைக்கின்றது
எடுத்தடி வைக்கும் முன்னாலே
ஏதோ எதுவோ தடுக்கின்றது.

கருத்துக்கள் என்னும் கையேட்டை
பொறுப்புடன்தானே திணிக்கின்றோம் – அது
வெறுப்பினைக் காட்ட முடியாமல்
வேண்டுமென்றே சிரிக்கின்றது.

பிறப்பினில் பேதம் கிடையாது – அதன்
பெமைகள் எவருக்கும் புரியாது
வல்லார் மட்டுமே பிறக்pன்றார் – அது
அல்லார் இன்னும் பிறக்கவில்லை.

வளர்;ந்த குழந்தைகளே – மண்ணில்
வாழும் தெய்வங்களே
தொட்டிலில் குழந்தைகள் தூங்குவதில்லை
சிந்தித்தபடியே சிரிக்கின்றன.

சந்திக்கும் அனைத்தையுமே
சவாலாய் எண்ணுங்கள் – அந்த
சாதனை ஏட்டினை சந்ததிக்காய்
எழுதிடச் செய்யுங்கள்.

உங்களை நம்புங்கள்
பிள்ளைகள் உங்கள் அங்கங்கள்
பெருமை கொள்ளுங்கள்
பேதமை தள்ளுங்கள்.

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

Nada Mohan
Author: Nada Mohan