pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி .
இலக்கம் -537
ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.)
—————————————-
பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் .
கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் .

பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை .
மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் .

கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் .
மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் .

பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் .
விருப்புடைய பட்சிகளை ,வரவேற்று வளர்த்திடுவார் .
ஆகா …….வியப்பில் ;;;;;;;;; விழிகள் ;;;;;;;
இறுதிவரை தொடரும் ,,,, பணிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading