pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி -இலக்கம் 539.
சித்திரை வந்தாலே .
:::::::::::::::::::::::::::::::::::::
சித்திரை வந்ததாலே ,சந்தோஷக் கொண்டாட்டம் .
சில்லறைச் சேமிப்புகள் ,சேர்ந்துமே முன்னோட்டம் .

ஆலயம் எங்குமே ,ஆண்டு விழாவென்று ,அது பெரும்
கொண்டாட்டம் .
ஆண்டவன் தரிசனம் ,கண்டு மகிழவே –
பக்தர்கள் விரைந்தோட்டம் .

அரும்புகள் நிமிர்ந்துமே,ஆதவனைப் பார்த்து –
அசைத்திடும் ,தலை ஆட்டம் .

ஆழத்தில் உள்ளவை ,வேர்களைப் பாய்ச்சியே –
உன்னதக் களியாட்டம் .

அடுத்தது வைகாசி ,ஆங் காங்கே திருமணம் .
தொடுத்திடும் கருமங்கட்கு ,துணை நிற்போர் பெருமிதம் .
ஆக்கம் .
பொன் .தர்மா 12.04.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading