” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

pon.tharma.

வணக்கம் .
இது வியாழன் கவி -இலக்கம் 539.
சித்திரை வந்தாலே .
:::::::::::::::::::::::::::::::::::::
சித்திரை வந்ததாலே ,சந்தோஷக் கொண்டாட்டம் .
சில்லறைச் சேமிப்புகள் ,சேர்ந்துமே முன்னோட்டம் .

ஆலயம் எங்குமே ,ஆண்டு விழாவென்று ,அது பெரும்
கொண்டாட்டம் .
ஆண்டவன் தரிசனம் ,கண்டு மகிழவே –
பக்தர்கள் விரைந்தோட்டம் .

அரும்புகள் நிமிர்ந்துமே,ஆதவனைப் பார்த்து –
அசைத்திடும் ,தலை ஆட்டம் .

ஆழத்தில் உள்ளவை ,வேர்களைப் பாய்ச்சியே –
உன்னதக் களியாட்டம் .

அடுத்தது வைகாசி ,ஆங் காங்கே திருமணம் .
தொடுத்திடும் கருமங்கட்கு ,துணை நிற்போர் பெருமிதம் .
ஆக்கம் .
பொன் .தர்மா 12.04.23

Nada Mohan
Author: Nada Mohan