பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

Selvi Nithianandan சங்கதிகேளு 607

வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல
சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக
இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ
இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது

இடிபோல செய்தி அதிகாலை வந்திட
இரவு தூக்கம் இல்லாது போக
இளவல் நிலை தலைதூக்கி நிற்க
இதயமும் பயத்தால் பதட்டமாய் அடிக்க

நாயும் குறுக்கே தெரிவிலே பாய
சேயும் பிறேக்கை இறுக்கவே பிடிக்க
தேய்து இழுத்து மரத்துடன் மோத
வாயும் முகமும் குருதியில் நனைய

வண்டியும் கீறல் வேகமும் மீறல்
தாயும் சீறல் தட்டிக்கேட்டா மோதல்
கையிலே கட்டு வேணுமாம் நோட்டு
கட்டுப்பாடு இல்லா கரணம் போடுதே.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading