” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan சங்கதிகேளு 607

வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல
சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக
இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ
இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது

இடிபோல செய்தி அதிகாலை வந்திட
இரவு தூக்கம் இல்லாது போக
இளவல் நிலை தலைதூக்கி நிற்க
இதயமும் பயத்தால் பதட்டமாய் அடிக்க

நாயும் குறுக்கே தெரிவிலே பாய
சேயும் பிறேக்கை இறுக்கவே பிடிக்க
தேய்து இழுத்து மரத்துடன் மோத
வாயும் முகமும் குருதியில் நனைய

வண்டியும் கீறல் வேகமும் மீறல்
தாயும் சீறல் தட்டிக்கேட்டா மோதல்
கையிலே கட்டு வேணுமாம் நோட்டு
கட்டுப்பாடு இல்லா கரணம் போடுதே.

Nada Mohan
Author: Nada Mohan