Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம்
கோடை வந்தாலே எழிலாய்
வாடையாய் வருவாயே சுகந்தமாய்
ஜாடையாய் தெருவிலும் நீயாய்
கடையில் விற்பனை பொருளாய்

காலையும் மாலையும் இரசிப்பாய்
கதிரவன் ஒளியில் பூவிரிப்பாய்
வீட்டிலும் வெளியிலும் பலவாய்
விந்தையாய் இப்போ வெளியாய்

பூத்திடும் பூக்கள் பலவிதம்
பாக்களும் வந்திடும் ஒருவிதம்
ஆக்கமும் சேரட்டும் வசந்தம்
நோக்கமும் புன்னகை பூக்களாய்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading