Selvi Nithianandan

நாற்காலி (602) 22.02.2024
உறுப்பாயும் இருப்பாய்
ஊராயும் வருகின்றாய்
உள்ளூர் வெளியூராய்
உலகமும் சுற்றுகிறாய்

உயர்தர மரமுமாய்
உன்விலை ஏற்றஇறக்கமாய்
உணவுக்கும் இருக்கையாய்
உறங்கவும் உதவியாய்

சுற்றுலாவில் மடிப்பாய்
சுற்றிவிளையாட வருவாய்
சுகாதாரம் பேணலாய்
சுந்தரமாய் இருப்பாயே.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading