இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

இப்போதெல்லாம் (604)

மனிதம் இப்போ செத்தும் போச்சு
மாக்கள் போன்று மாறியும் ஆச்சு
மகிழ்ச்சி எல்லாம் மழுங்கி போச்சு
மல்லுக் கட்டும் காலமாய் ஆச்சு

பணம் என்ற குறிக்கோள் ஒன்று
குணம் மாறி பிணமாய் நின்று
தனம் நிலமென பறிப்பது இன்று
மனம் குறிகி மதியும் வென்று

நாகரீக போர்வைக்குள் நசுங்கிய நினைவு
நாலாபுரமும் சண்டை அடிபட்டு சாவு
நாளை எதுவென தெரியாத வாழ்வு
நம்மிடம் இருப்பதை பகிர்ந்தே வாழு.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading