Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

கந்தனுக்கு விரதமாய்
கார்த்திகை மாதமாய்
காசினி மழையுமாய்
கனத்த அகமுமாய்

காந்தள் மலர்களாய்
கல்லறை நிறையுமே
காவிய நாயகராய்
காட்சியாய் ஒளிருமே

கீதங்கள் சோகமாய்
கண்ணீரும் வழியுமே
கல்லறை நினைவுகள்
காவியம் படைக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading