Selvi Nithianandan

எதிர்ப்பு அலை
தமிழ்பேசும் இனத்தின் சாபம்
தட்டிக் கேட்டாலே கோபம்
தரம்கெட்டு ஆளுது அரசு
தக்கவைக்க போடுது கூத்து

ஒற்றுமையாய் போராடும் நீதி
ஓங்கி ஒழிக்கட்டும் நியாயம்
ஒதுக்கிய பணமெல்லாம் பதுக்கம்
ஒதுக்கிடம் தேடும் நோக்கம்

பதவி விலகாத திட்டம்
பாதுகாப்பு இல்லாத சட்டம்
குடும்ப ஆட்சியால் தொல்லை
குவலயமே பிரளயமாகும் நிலைமை

ஒருசாண் வயிற்காய் பலர்போராட்டம்
நாட்டையேவித்து குடும்பமே கொண்டாடம்
நல்லாட்சி எனநம்பி வாக்களித்தவரும்
நடுவீதிக்கு வந்த நிலைபாரீர்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading