Selvi Nithianandan

சுடர்
கார்த்திகை மாதம்
வந்தாலே
கண்ணீரும் தாரையாய்
வழிந்தோடும்
காசினியும் இருளாகி
மழையாகும்
கல்லறைகள் சுடராலே
ஓளியாகும்
கவலைகள் கனமாகி
ரணமாகும்

விளக்கீடு வந்தாலே
வீடுகள் வீதிகள் ஆலயம்
ஒளியாகி காட்சிபெறும்
விருட்சமும் தாக்கத்தால்
தீப்பிழம்பாக மாறிவிடும்

கவனத்தின் குறைவால்
பற்றிவிடும் வீடும்
தவனத்தின் நிறைவால்
சுடரும் ஒளியாகும்

ஆதவனின் சுடரால்
அவனிக்கே ஆட்சி
அண்ணாமலையான் சுடரால்
அடியவர்க்கு மாட்சி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading