Selvi Nithianandan

வளர்ந்த குழந்தைகள் தாமே (567)

வளர்ந்த குழந்தைகள் தாமேயென
விட்டுவிடுவதால் விளைவும் வந்திட
வீணாய்போன செலவும் சேர்ந்திட
வந்திடும் சோகத்தால் கவலைதரும்

விடுமுறை நாட்களில் வெளியிலே
இரவுபகலாய் கூட்டமாய் தெருவிலே
தூக்கம் கலைந்து போகுது வீட்டிலே
வளர்ந்த பிள்ளையால் தொல்லைதரும்

வளர்ப்பு சரியில்லா ஏளனப்பேச்சு ஒருபுறம்
வரட்டு கெளரவப் பேச்சும் மறுபுறம்
வலி சுமந்த பெற்றவர்களாய் இன்றும்
விழிநீர் வழிந்தோடும் அமைதியாய் நாளுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading