சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி

ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும் பல சட்டம்
விதி வரையும் சில சட்டம்
வெந்தெழுதும் மௌனத்துள் சட்டங்கள்

புலம் பெயர்வில் பன் மொழியுள்
பல்லின மக்களிடை நிதம் கலந்து
நாமிட்ட இருள் கதவை உடைத்தெழுந்து
நமக்கே உணர வைக்கும் மானுடத்தேடல்

சரியெது பிழையெது விட்டது தொட்டதேது
காலம் விரைவெனக் கடக்கிறது அதனால்
வாழ்வியல் சூழலும் வாழ்நடை மொழிதலும்
இங்கித புரிதலும் தோளணைக்க நம்

இளையோரை நமக்குள் இசைந்தசைய
விட்டும் கொடுத்தும் வெல்வோமா அன்பினால்

Nada Mohan
Author: Nada Mohan