இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி

ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும் பல சட்டம்
விதி வரையும் சில சட்டம்
வெந்தெழுதும் மௌனத்துள் சட்டங்கள்

புலம் பெயர்வில் பன் மொழியுள்
பல்லின மக்களிடை நிதம் கலந்து
நாமிட்ட இருள் கதவை உடைத்தெழுந்து
நமக்கே உணர வைக்கும் மானுடத்தேடல்

சரியெது பிழையெது விட்டது தொட்டதேது
காலம் விரைவெனக் கடக்கிறது அதனால்
வாழ்வியல் சூழலும் வாழ்நடை மொழிதலும்
இங்கித புரிதலும் தோளணைக்க நம்

இளையோரை நமக்குள் இசைந்தசைய
விட்டும் கொடுத்தும் வெல்வோமா அன்பினால்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading