சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி

ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும் பல சட்டம்
விதி வரையும் சில சட்டம்
வெந்தெழுதும் மௌனத்துள் சட்டங்கள்

புலம் பெயர்வில் பன் மொழியுள்
பல்லின மக்களிடை நிதம் கலந்து
நாமிட்ட இருள் கதவை உடைத்தெழுந்து
நமக்கே உணர வைக்கும் மானுடத்தேடல்

சரியெது பிழையெது விட்டது தொட்டதேது
காலம் விரைவெனக் கடக்கிறது அதனால்
வாழ்வியல் சூழலும் வாழ்நடை மொழிதலும்
இங்கித புரிதலும் தோளணைக்க நம்

இளையோரை நமக்குள் இசைந்தசைய
விட்டும் கொடுத்தும் வெல்வோமா அன்பினால்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading