காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி

ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும் பல சட்டம்
விதி வரையும் சில சட்டம்
வெந்தெழுதும் மௌனத்துள் சட்டங்கள்

புலம் பெயர்வில் பன் மொழியுள்
பல்லின மக்களிடை நிதம் கலந்து
நாமிட்ட இருள் கதவை உடைத்தெழுந்து
நமக்கே உணர வைக்கும் மானுடத்தேடல்

சரியெது பிழையெது விட்டது தொட்டதேது
காலம் விரைவெனக் கடக்கிறது அதனால்
வாழ்வியல் சூழலும் வாழ்நடை மொழிதலும்
இங்கித புரிதலும் தோளணைக்க நம்

இளையோரை நமக்குள் இசைந்தசைய
விட்டும் கொடுத்தும் வெல்வோமா அன்பினால்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading