இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர்

வலிகள்
கோடை காலம் வந்தும்
வாடைக்காற்றோ அதி
வேகமாகிட கூடவரும்
குளிர் மழைக்கூதலும்
சாடையாகப் பனிக்கல்
சேரக் கொட்டிக் கொட்டிப்
பசி தீர்க்கிறது

இடையிடையே ஒளிதரும்
கதாநாயகன் உதயசூரியன்
தானுமுண்டென கண்கள்
கூசிட உத்துப் பார்க்கிறது

விடுமுறை செல்லும் மாந்தர்
நெடுஞ்சாலைப் பிரயாணம்
நீண்ட தூரம் அதிவேகமும் ,
கழைப்பிலும் மோதிடும்
விபத்துகளின் விபரீதம்

எத்தனை கனவோடு மகிழ்வு
சற்று முன்பு அசைபோடவே
அத்தனையும் ஒரு நொடியில்
அற்றுப்போய் குற்றுயிராய்ச்
சிதறி உதிரம் பாய இறக்கும்
பிணங்களில் மாறா வலிகள் .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading