காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா….40 11.06.2026

உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா
உன்னதமாய் தொடங்குதுஇன்று
நான்காண்டிற்கு ஒருமுறை வரும்விழா நாடுகள்தாண்டியவிழா
கால்கள்ஆடும் கவின்கலை கண்களுக்குள் மின்னும் பந்தின்அலை
பந்தின் பின்னால் ஓடுவதே இங்குபெருமை !

பச்சைப்புல்வெளிப் போர்க்களத்தில்
பாய்ந்தோடும் மானிடப் பேராற்றல்
வலையைநோக்கிப் பாயும்கணைகள்
தடுத்து நிறுத்த துடிக்கும்கரங்கள்
தனிமனிதஆட்டம் இங்கில்லை
கூட்டுமுயற்சியே இவர்களின்எல்லை
காற்பந்தென்பது வெறும்விளையாட்டல்ல
உலகையே குடும்பமாக இணைக்கும் பேரற்புதம்
மானுடம்பாடும் மகா காவியம் !

கோலென்ற ஒற்றைச்சொல்லில் கோடிநெஞ்சம் துள்ளிக்குதிக்கும்
தோல்வியின்கண்ணீரும் வெற்றியின் புன்னகையும்
ஒரேபுல்வெளியில் சங்கமிக்கும்
களத்தில் எதிரிகளாய் மோதினாலும்
கணத்தில் ஆட்டம்முடிந்ததும் அணைத்துக் கொள்ளும்நட்பிது !

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading