Selvi Nithianandan

காணி
காணி நிலம் வேணும்
பாரதி கூற்று அன்று
சாணி பூசி மெழுக
வீடும் இல்லா இன்று
பேணி காத்த நிலமும்
அடுக்கு மாடி என்று
நாணி கூனி நாமும்
கைவிட்ட நிலை கேளீர்
ஆறு பரப்பு காணி
வீறு கொண்டு நாளும்
நாற் புறமும் மதிலும்
கால் பரப்பு போச்சு
பாதை முற்றம் இல்லை
பகை கொண்டு தொல்லை
பேதை மனம் வெள்ளை
பேரம் பேச வில்லை
நாண்டு பிடித்து தானே
காணி பறிப்பு இன்று
தூண்டும் ஆட்சி போல
நம்பிக்கை துரோகம் செய்யுதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading