இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே (573)

வித்தாய் முளைத்தாய்
விருட்சமாய் வளர்வாகும்
வீரியமே மூச்சாய்
வையத்துள் வாழ்வாகும்

எழுத்தின் உருவம்
ஏடாய் சிறக்கும்
எண்ணின் வடிவம்
எழுச்சியாய் பிறக்கும்

தரணியில் சிறப்பு
தடைகள் உடைப்பாகும்
தமிழின் பிறப்பு
தரமாய் உயர்வாகும்

எழுத்தின் வித்தே
ஏராளாள மொழியாகும்
ஏகமாய் படர்ந்து
ஏற்றமாய் வேரூன்றுமே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading