அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Selvi Nithianandan (583) திருத்தம்

தந்தையின் நாளும் வந்ததே இன்று 583

தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் இன்று வந்ததே நாளாய்
மானிட வாழ்வில் மகத்தான தந்தை
மங்காச் செல்வத்தின் மகுடமாய் எம்தந்தை

சிந்தை ஒருபுறம் தந்தையின் நினைவு
விந்தையாய் இன்னுமே வியப்பான இறப்பு
கண்ணுக்குள் இன்றுமே அழுகையின் ஒலிப்பு
காலத்தால் அழியாத உன்னத இருப்பு

தளராத நம்பிக்கை கொண்டு வாழ்ந்து
அயராத உழைப்புடன் முன்னேற்றம் கண்டும்
ஐம்பது ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
ஐயகோ காலனவன் முடித்தானே வாழ்வுதனை

நாற்பத்தொன்பது ஆண்டும் இன்றுமாய் நகரந்திட
நாலாபுறமும் மகவுகள் சிதைந்து வாழ்ந்திட
நல்லூரான் மஞ்சநாளால் இறப்பும் வந்ததே
அதேநாளிலே இம்முறை திதியும் வந்ததே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading