இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

என்று தீரும் (582)
ஆண்டுகள் பலவாய்
ஆட்சியின் பிடியிலே
வேண்டுகோள் விடுத்தும்
வீழ்ச்சியின் வலியிலே

தேடும் உறவுகள்
தேடியே இன்னுமே
வாடும் அகங்கள்
வாஞ்சையின் விழியிலே

காலங்கள் நகருதே
காத்திருப்பு முடியலே
முடிவுகள் தெரியா
முகவரி சரிதமே

பசிப்பிணி தீர்த்திட
பணபலம் இல்லை
முகத்திரை விலத்தி
முடிவை கொடுத்திடுஅரசே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading