Selvi Nithianandan

என்று தீரும் (582)
ஆண்டுகள் பலவாய்
ஆட்சியின் பிடியிலே
வேண்டுகோள் விடுத்தும்
வீழ்ச்சியின் வலியிலே

தேடும் உறவுகள்
தேடியே இன்னுமே
வாடும் அகங்கள்
வாஞ்சையின் விழியிலே

காலங்கள் நகருதே
காத்திருப்பு முடியலே
முடிவுகள் தெரியா
முகவரி சரிதமே

பசிப்பிணி தீர்த்திட
பணபலம் இல்லை
முகத்திரை விலத்தி
முடிவை கொடுத்திடுஅரசே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading