Selvi Nithianandan

எழுத்தறிவில்லை எனில் 584

எழுத்தறிவில்லை என்றால்
ஏளனமாய் பார்க்கும் மானிடம்
ஏக்கமாய் எண்ணியே
நாளும் கழிந்திடும்

எழுத்தறிவில்லா குழந்தைகள்
ஏழ்மையில் வாடிடும்
பணபலம் இருந்தும்
பகடைக்காயாக உருளும்

ஆளுமை அரசியலாய்
கொடுமைகள் காட்டல்
அவனியில் விரட்டியே
சந்ததியை காப்போம்

: எழுத்தறிவித்தவன் இறைவன்
எண்ணியே நிறைவாய் வாழ்வோமே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading