இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

பிறந்த மனை

செம்மண் சுவருக்குள்ளே
நல்லதொரு இருப்பு
நாலாபுறமும் சோலைகள்
நல்கீற்றாய் சிறப்பு

பண்டிகை வந்தாலே
பணத்துக்கு சண்டை
பந்தாட்டம் போலவே
பலியாகும் தாய்மண்டை

ஆடலும் பாடலுமாய்
அரங்கேற்றம் காணும்
ஆவலாய் உறவுகள்
ஆனந்தம் கூடும்

சில்லறைசிதறுவதுபோல்
தற்கம் முற்றும்
சிரித்து சமாளித்து
ஓடியதொரு முற்றம்

மண்வீடு அடுக்குமாடி
மாற்றம் கண்டதே
மாபிளாய் நடைபாதை
மாறிப் போனதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading