Selvi Nithianandan

சோகமாய் நினைவும் (591)

கார்திகை வந்தாலே
பற்பல நினைவுகள்
மீண்டிட முடியாத
சோகத்தின் வலிகள்

கார்மேகம் அழுதிடவே
இருளாகி மறைந்திடும்
கனத்த இதயமாய்
நாளுமே கழிந்திடும்

கார்த்திகை தீபமும்
ஒளியாய் சென்றிடும்
கடந்திடும் மாதமும்
அழியாத நினைவாகும்

கறுப்பு வெள்ளியும்
கடந்திட்ட பொழுதும்
கடுங்குளிருடன் களைப்பும்
கடக்குதே மாதமாய்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading