Selvi Nithianandan

மனிதநேயம் ( 592)

மனிதத்தின் நேயமே
மாண்புற வேண்டும்
புனிதமாய் கருதி
செயல்படல் நன்று

மானிடம் இப்போ
மாக்களாய் மாற்றம்
புனிதம் தொலைத்து
புழுவாய் ஏற்றம்

மான்புறு மாதமாய்
மார்கழி உதித்தாய்
சான்றுகள் வேண்டாம்
சாாட்சியாய் வாழு

ஐக்கிய நாடும்
ஐக்கிய நாளாய்
மார்கழி பத்தாய்
மண்ணிலே வந்ததே

Nada Mohan
Author: Nada Mohan