Thiranin menmai Thiiddum Kulanthaikalke

25.04.24
கவி இலக்கம் -313
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே

ஊட்டும் கல்வி உயிரூட்ட
காட்டும் கனிவு பயிரூட்ட
தீட்டும் குழந்தைகளே !
பேரோடு பாராட்டும் திறனின்
மேன்மை பொங்கட்டுமே

வாட்டும் வதைகள் வீழ்த்திட
கூட்டும் கலகலப்பும் குதூகலமும்
தேட்டும் அறிவும்,ஆற்றலும்
பல்கிப் பெருகி அழகாய்ப்
பூத்துக் குலுங்கட்டுமே

நாட்டும் நீதி,நேர்மையும்
சூட்டும் பட்டப் படிப்பும்
தீட்டும் உற்றார் துடிப்பும்
எட்டும் பெரியோர் அன்பும்,
மதிப்பும் பெருகட்டுமே

பரவட்டும் பாரினில் நாடெங்கும்
பொழியட்டும் திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே .

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading