” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Thiranin menmai Thiiddum Kulanthaikalke

25.04.24
கவி இலக்கம் -313
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே

ஊட்டும் கல்வி உயிரூட்ட
காட்டும் கனிவு பயிரூட்ட
தீட்டும் குழந்தைகளே !
பேரோடு பாராட்டும் திறனின்
மேன்மை பொங்கட்டுமே

வாட்டும் வதைகள் வீழ்த்திட
கூட்டும் கலகலப்பும் குதூகலமும்
தேட்டும் அறிவும்,ஆற்றலும்
பல்கிப் பெருகி அழகாய்ப்
பூத்துக் குலுங்கட்டுமே

நாட்டும் நீதி,நேர்மையும்
சூட்டும் பட்டப் படிப்பும்
தீட்டும் உற்றார் துடிப்பும்
எட்டும் பெரியோர் அன்பும்,
மதிப்பும் பெருகட்டுமே

பரவட்டும் பாரினில் நாடெங்கும்
பொழியட்டும் திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே .

Nada Mohan
Author: Nada Mohan