பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Thiranin menmai Thiiddum Kulanthaikalke

25.04.24
கவி இலக்கம் -313
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே

ஊட்டும் கல்வி உயிரூட்ட
காட்டும் கனிவு பயிரூட்ட
தீட்டும் குழந்தைகளே !
பேரோடு பாராட்டும் திறனின்
மேன்மை பொங்கட்டுமே

வாட்டும் வதைகள் வீழ்த்திட
கூட்டும் கலகலப்பும் குதூகலமும்
தேட்டும் அறிவும்,ஆற்றலும்
பல்கிப் பெருகி அழகாய்ப்
பூத்துக் குலுங்கட்டுமே

நாட்டும் நீதி,நேர்மையும்
சூட்டும் பட்டப் படிப்பும்
தீட்டும் உற்றார் துடிப்பும்
எட்டும் பெரியோர் அன்பும்,
மதிப்பும் பெருகட்டுமே

பரவட்டும் பாரினில் நாடெங்கும்
பொழியட்டும் திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading