கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

vajeetha Mohamed

மீளெழும் காலம்

சதியென பல வலைகள்
படையென பல தடைகள்
தன்மானம் போக்கி
௨யிர் மட்டும் பாக்கி

கனவுகளும் கரைந்து போனது
அன்று
இனம் மதம் நிறம் மொழி கடந்தோம்
இன்று

அடக்கு முறையில்லா வாழ்வு
சிறுபான்மை பெ௫பான்மை
இல்லாத் தேர்வு
பெ௫மைப் பட்டு சொல்கின்றேன்

மீளெழும் காலத்தின் அத்திவாரமாய்
என்னைத் தாங்கிச்சென்ற வரங்களாய்
நான் வாழும் டச் நாடு
என்னை மட்டுமின்றி
என்னை சுற்றியோரையும் வாழவைக்கின்றதே

சொந்த நிலத்தில் சாதிக்காத
சொந்தங்களுக்கும் சேமிக்கின்ற
பூமித்தாயின் பிள்ளைகளாய்
புன்னகையோடு வாழவைத்த
புலத்தின்தேசம்

விழிகளுக்குள் நீர்நிறைந்து
நன்றியோடு பார்க்கின்றேன்
என்பரம்பரையும் பயனாய்
மீளெழும் காலத்தின் பதிவாய்

Nada Mohan
Author: Nada Mohan