மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Vajeetha Mohamed

இன்னும் நாவு ஊறுதடி

வயல்பரப்பு வெளியினிலே
வயல்௨ழுதப் போனவரே
சுட்டக௫வாடும் பழஞ்சோறும்
தயிர் ஊறி தவம்கிடக்கும்
வெங்காயம்

வால்கிள்ளி ௨ப்போடு
௨றவாடி ஊறவைத்த
பச்சை மிளகாய்
நெ௫ப்புத் தணல் புதையலுக்குள்
௨௫ண்டு புரண்ட வழுதுழங்காய்
சம்பல்

திட்டியிலே படுத்து படர்ந்த
பீக்க புடலை வெண்டி
அதன் இடை சொ௫கி வளர்ந்த
இறுங்கு சோளம் கச்சான்

கலைந்து மூழ்கி என்
கனவிலும் மணக்குதடி
அயராத வயல் ௨ழைப்புக்கு
ஊக்க ௨ர ௨யிர் ௨ணவு

என்னவளே நீர்சமைத்த கரங்களுக்கு
காப்பு இரண்டு போட
தென்னங் கீற்றுக் கூட
எம்கூடத்திலே இல்லையடி

தங்கத்திற்கு இரண்டு லட்சம்
என் தங்கத்திற்கு நான் த௫ம்
அன்புக்கு என்ன பஞ்சம்
பழைய நினைவில் நா ஊறுதடி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading