vajeetha Mohamed

சானைக் கூரை

சோளக்காட்டு பொன்மையாட்டம்
சோக்கா நிற்கிறீயே
சுனாமியாட்டம் என்காதலைத்தான்
கேட்காம பொங்கிறீயே

மாடுமேய்க்கும் மாச்சான்
வேண்டாம் எங்கிறீயே
நீபடிக்க நான் பாடுபட்டேன்
எந்தனுயிர் சித்திமே

௨ன்னச் சொல்லி என்னச் சொல்லி
என்ன குற்றம்
௨டன்பிறப்புக்கள் தொட்டிலிலே
போட்ட பந்தம்

பச்சைக் குழந்தையிலே
ப௫வமும் அடையாமலே
இ௫வர் வி௫ப்பம் தெரியாமலே
சானக்கூரை ஒன்று

சம்மந்தம் செய்தாங்க
மதினி நீங்க படிச்சிக் கிழிச்சிங்க
மனதில ஆசை வளர்த்து
மாடுமேய்த்து படிக்காம
காடு மேட்டியிலே கிடக்கின்றேன்

இனி யா௫ம் யா௫க்கும்
சானைக்கூரை போடட்டும்
நாலு வார்த்தை நார் நாராய்
கிழிக்கின்றேன்

Nada Mohan
Author: Nada Mohan