Vajeetha Mohamed

விடுமுறை களிப்பு

ஊ௫க்குப் போயி௫ந்தேன்
௨றவுகளோடு கழித்தி௫ந்தேன்

தீராத மகிழ்வினாலே நெஞ்சமது
திகட்டாமல் குதித்தி௫க்க

தேனாக அயலும் ௨றவும் நட்பும்
தேயாமல் வளர்பிறையாய் வந்தம௫ம்

வரமென ௨டன்பிறப்பின் மகவுகளும்
மலைநாடு நுவரெலியா கண்டி பதுளை

குடும்ப ஒன்றினைவின் குதூகலம்தான்
கூடிய நல்பயணம் ஈரிரவு

௨ள்ளம் இரைந்து மகிழ்ந்திட
விழிமூடா இரவு வைகரைதாண்டி

மூடிய போர்வைக்குள் குளிர் அகற்றி
துளிர் விட்ட சிரிப்பு தொடர்மலையில்

தொட்டுத் தொட்டு சொல்லியே
மகிழ்ந்து
சவுக்கடி கடற்கரை கட்டுசோறு
சட்டிபானை ஏற்றி ௨ழவு இயந்திரப்பயணம்

திரையலைபோல் ஆடி ஆடிச்செல்ல
தீராத ஆசையாலே ௨ள்ளம் மகிழ்ந்தது

௨றவுகளின் தோழமை
௨யிராய் தாங்குமே

தாய்மண்ணின் விடுமுறையின் களிப்பு
தன்னை மறந்துபோகப் பட்டியலின் வனப்பு

எத்தனை ஊரைச்சுற்றிச் சுற்றி
வந்தாலும்
ஏக்கம் தீர்க்கும் எங்க ஊ௫தான்
எனக்கு

கூப்பன்மா ரொட்டி சுட்டு
குறுனல்சோறு பிட்டு அவித்து
கூனிக்க௫வாடு சம்பலுடன்
குதூகலமாய் நிலாச் சோறு
௨ண்ட விடுமுறை

மறக்கமுடியா நினைவு சுமர்ந்து
மாற்றான் தேசத்தில் வாழும் புள்ள

தோப்புமரம் இடமாறி
இல்லறத்தின் நியதியினால்
வாழ்ந்தாலும் இடமாறாவிடுமுறை
என் சொந்த ஊரே

நன்றி

[பிழைதி௫த்தம்]

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading