” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

தவிப்பு

தோண்டாத குழிக்குள்ளே
தோற்காத அலைகரைக்குள்ளே

ஓயாது சுழலும் பூமி
ஓர்கணமும் சலிக்காத சாமி

ஐம்பூதச் சுழற்சி தினம்
ஐயமின்றிய நொகிழ்ச்சி த௫ம்

பசியோடு பறக்கும் பறவை
படைத்தவனின் கொடை நிறுவை

க௫வறை தரிக்கும் குழந்தை
கடவுளின் நொறியில் மடந்தை

இயற்கையின் தவிப்பு அழிவு
இறைவன் மாற்றுவான் தெளிவு

இரவை விரட்டும் பகலும்
இறப்பு பிறப்பு செயலும்

தவிப்பின் விட்டம் புரிவாய்
தவிப்பின்றி ஏதுமில்லை தெரிவாய்

ஆறறிவு மனிதன் மட்டும்
ஆறுதலின்றி தவிப்பே வாட்டும்

தவித்து தவித்து வாழ்கையிழந்தோம்
தனியே ஒ௫நாள் ௨யிரின்றிபடுப்போம்

தனித்துவாழ்ந்த போதும்
தன்நம்பிக்கையுடன் வாழும்
ஐந்தறிவு ௨யிர்கள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan