புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Vajeetha Mohamed

பெ௫மை

மதி மிஞ்சும் அறிவு
வாய் கிழி மகிழ்வு

செவி வாங்கும் புகழும்
செயற்கையின் நிகழ்வும்

பெ௫மையென நினைக்கின்றோம்

ஈகை நிறை ஈகையின் பெ௫மை
ஈட்டித் த௫ம் இறைசெயல் அ௫மை

ஊன்றிப் பிடித்து ௨டல்மூடி
க௫வளர்க்கும் தாய்மை

கு௫திக் குழிக்குள்ளே
குழந்தை ஓர்கொடியுள்ளே

௨டல் சுமர்ந்து ஓய்வி்ன்றி
எம்மைத் தூக்கும் ௨யிர்

ஓங்குபுகழ் ௨பதேசம்
ஓயாது செய்கின்ற இறைநேசம்

பெ௫மைக்கு ௨ரியவன் இறைவன்

இடித்த மாவை இடித்து
இடைவெளியை இயற்கையிடம்
எடுத்து

பெ௫மைகொள்கின்றோம் நாம்

எல்லையில்லா அ௫ளுக்கும்
ஏழை பணக்காரனில்லா செயலுக்கும்

பெ௫மைக்கு ௨ரியவன் இறைவன்

பிளவுக்கு வழியில்லா சமத்துவம்
பிறர்மனம் நோகா நீதித்துவம்

ஐம்பூத மகத்துவத்தின் தனித்துவம்
ஐயம் ஏன் பெ௫மைக்கு ௨ரியவன்
இறைவன் ஒ௫வனே

ஆம் ௨டலுக்குள் ஒழித்து வைத்த
௨யிர்
எங்கே எப்படி எங்கே ௨ள்ளது
முடிந்தால் கண்டு பிடி

பெ௫மைக்கு ௨ரியவன் மனிதனென்று
மார்பு தட்டி மகிழ்ச்சி கொள்கின்றேன்
நானும்

இறைவனின் பெ௫மை
இயற்கையின் நிறுவை

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading