” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” அடையாளத்தின் முகவரி “

ரஜனி அன்ரன் (B.A) ” அடையாளத்தின் முகவரி ” 16.04.2026

குரலென்பது வெறும் ஒலியல்ல
ஆன்மாவின் வெளிப்பாடு ஆளுமையின் அடையாளம்
எண்ணங்களைச் சொல்லும் விசையாக
சொற்களுக்கு உயிர்கொடுக்கும் ஆயுதமாவது குரல்
உலகக்குரல் தினமான இன்று
உயிர்கொடுக்கும் குரலைப் போற்றிடுவோம் !

விம்மலில் விசும்பலில் துயரம் சொல்லும்
கோபத்தின் உச்சத்தில் எரிமலையாகும்
கொஞ்சும் மொழியில் தேனாய் இனிக்கும்
தாயின் தாலாட்டிலோ அமைதி கொள்ளும்
அதுவே அடையாளத்தின் முகவரி குரல் !

உயிரின்ஓசை உதிரமின்றி ஓடும்நதியிது
ஊமைச் சனத்தின் உரத்த சிந்தனையிது
அநீதிகண்டு எழும்பும் பேரலை
அக்கிரமம்கண்டு கொதிக்கும் எரிமலை
சத்தமாகப் பேசுவது சிறப்பல்ல
சத்தியக்குரல் ஒலிப்பதே
உலகிற்குப் பொறுப்பு !