04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
” அடையாளம் “
ரஜனி அன்ரன்
“ அடையாளம் “ கவிதை….ரஜனி அன்ரன் (B.A) 20.06.2024
இனத்தின் அடையாளம் மொழி
மொழி பண்பாடு வரலாறு
எமை இனங்காட்டும் அடையாளங்கள்
அடையாளச் சின்னங்களை
பண்பாட்டு விழுமியங்களை
புலம் பெயர்ந்தாலும்
கண்போல காத்திடுவோம் !
அநீதியின் ஆதிக்கம் போரின் அனர்த்தம்
வாழ்விடத் தொலைப்பு வறுமைக்குள் தவிப்பு
தந்தது புலம்பெயர்வினை
அடையாளமானது அகதியெனும் முத்திரை
தஞ்சம் தந்த தேசத்திற்கு நன்றி !
அன்பு தந்த அன்னை மண்ணை விட்டு
அலைகடல் கடந்து அந்நிய தேசம் வந்தாலும்
அகதியாகி சகதியெனும் சேற்றுக்குள் மூழ்கினாலும்
அடுத்தடுத்து சவால்களை எதிர்கொண்டாலும்
அயராத கடின உழைப்பும் விடாமுயற்சியும்
அள்ளித் தந்தது நிரந்தர உரிமையை !
அடுத்த சந்ததி அடையாளத்தோடு வாழ
எம் மொழியையும் பண்பாட்டையும்
வரலாறாய்ப் புகட்டி நிற்போம் !
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...