தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”

கவி இல(132) 09/05/24

பத்து மாத பந்தம் -கருவறையில்
காத்து வளர்த்த சொந்தம்
தொப்புள் கொடியுறவு
அறுந்திடுமோ என்றும்

அன்பைச் சொரிந்தாய்
வலி தாங்கி ஈன்றெடுத்தாய்
பாலமுது ஊட்டிடவே- பக்குவமாய்
பத்தியமும் காத்தாயே

கண்ணுறக்கம் தொலைத்தாய் -நான்
கண்ணுறங்க நீ தாலாட்டினாய் -என்
வளர்ச்சியிலே இன்பம் கண்டாய்
உயர்ச்சியிலே திண்ணம் கொண்டாய்

பள்ளியில் விட்டுத் தள்ளி நின்றாய் –
நான் துள்ளி வர அள்ளிக் கொண்டாய்
தடுக்கி விழு முன்னே
பதறி வந்து தூக்கிடுவாய்

அம்மா உன் அன்புக்கு
எல்லை தான் ஏது உண்டு
எனக்கென்று எல்லாம் செய்தாய்
உனக்கென்று நான் என்ன செய்தேன்.?
யுகம் பல கடந்தாலும் -நான்
உன் முகம் மறந்திலேன் அம்மா!!!!

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading