பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…

வியாழன் கவி -1975

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே❤️…!!

அகரமின்றி அழகேது நம்
தாய்மொழிக்கு
அன்னையின்றி வாழ்வேது
மனிதர் நமக்கு
தாயின்றித் தான் உயிரேதும்
தங்குமா பூமியில்
தளராத நம்பிக்கஒ ஒளியே
தாய் அன்றோ…!

கருவறை குடிகொள்ளும்
தாய்மை இடத்தே
உருவாக்கும் இறைவடிவே
உனைப் பணிவோம்
உயிரோட்ட அன்பு எங்கே
அறிவாயா- மனிதா
உணர்வோடு மதிப்பாக்கு
அன்னை மடியை…!

சுற்றி வந்து சுமையின்றி
சுகம் தரும் தாய்
சுமையென்று நீ விலக்க
நியாயமுண்டோ?
முதுமைக்குள் மூழ்கும்
அவள் காலம் அறிந்து
முத்தாய் நீ சுமக்கவும்
வேண்டாமோ சொல்..!

எத்தனை உறவுகள்
உன்னோடு கடந்தாலும்
உனக்குள் உணர்வாகும்
அன்னையெனும் பாசம்
வேசங்கள் இடாது என்றும்
வேதனை தராது நிற்கும்
வெண் சங்கு தோற்கும்
அன்னை அவளுக்கு
ஈடு இணை ஏது இவ்வுலகிலே..!
சிவதர்சனி இராகவன்
8/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading