கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…

வியாழன் கவி -1975

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே❤️…!!

அகரமின்றி அழகேது நம்
தாய்மொழிக்கு
அன்னையின்றி வாழ்வேது
மனிதர் நமக்கு
தாயின்றித் தான் உயிரேதும்
தங்குமா பூமியில்
தளராத நம்பிக்கஒ ஒளியே
தாய் அன்றோ…!

கருவறை குடிகொள்ளும்
தாய்மை இடத்தே
உருவாக்கும் இறைவடிவே
உனைப் பணிவோம்
உயிரோட்ட அன்பு எங்கே
அறிவாயா- மனிதா
உணர்வோடு மதிப்பாக்கு
அன்னை மடியை…!

சுற்றி வந்து சுமையின்றி
சுகம் தரும் தாய்
சுமையென்று நீ விலக்க
நியாயமுண்டோ?
முதுமைக்குள் மூழ்கும்
அவள் காலம் அறிந்து
முத்தாய் நீ சுமக்கவும்
வேண்டாமோ சொல்..!

எத்தனை உறவுகள்
உன்னோடு கடந்தாலும்
உனக்குள் உணர்வாகும்
அன்னையெனும் பாசம்
வேசங்கள் இடாது என்றும்
வேதனை தராது நிற்கும்
வெண் சங்கு தோற்கும்
அன்னை அவளுக்கு
ஈடு இணை ஏது இவ்வுலகிலே..!
சிவதர்சனி இராகவன்
8/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading